வணக்கம் தோழர்களே.. சி.ஆர்.பி.எப்., எனப்படும் சென்ட்ரல் ரிசர்வ் போலீஸ் படையைப் பற்றி நாம் அனைவரும் அறிவோம். இந்தப் படை 1939லேயே துவங்கப்பட்டு இருந்தாலும், 1949 முதல் இந்தப் பெயரைப் பெற்றது. தற்போது இந்தியாவின் உள் நாட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் இந்தப் பாதுகாப்புப் படை 60 ஆண்டுகளைத் தாண்டி சிறப்புற செயலாற்றி வருகிறது. இந்தப் படைக்கு தற்போது 207 பட்டாலியன்கள் உள்ளன. இவ்வளவு பிரசித்தி பெற்ற சி.ஆர்.பி.எப்., பாதுகாப்புப் படையில் 54 துணை ஆய்வாளர் காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது
சென்ட்ரல் ரிசர்வ் போலீஸ் படையின் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.01.2013 அடிப்படையில் 21 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். 10ம் வகுப்புக்கு இணையான படிப்பை முடித்துவிட்டு, 3 ஆண்டு படிக்கக்கூடிய டிப்ளமோ படிப்பை சிவில் இன்ஜினியரிங் பிரிவில் முடித்திருக்க வேண்டும். இந்தியாவின் எந்த பகுதியிலும் பணிபுரியத் தயாராக இருக்க வேண்டும். இந்தத் தகுதிகளுடன் சில குறைந்த பட்ச உடல் தகுதிகளும் தேவைப்படுகிறது. உயரம் குறைந்த பட்சம் 170 செ.மீ., இருக்க வேண்டும். மார்பளவு குறைந்த பட்சம் 80 செ.மீ.,ரும், 5 செ.மீ., விரியும் தன்மையும் பெற்றிருக்க வேண்டும். கண்ணாடி அணிந்தவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியாது. அதே போல் வண்ணக் குறைபாடு உள்ளவர்களும் விண்ணப்பிக்க முடியாது. இந்தப் பதவிக்கு எழுத்துத் தேர்வு மற்றும் இதர தொடர் தேர்ச்சி முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
சி.ஆர்.பி.எப்.,பின் மேற்கண்ட பதவிக்கு ரூ.50/- ஐ போஸ்டல் ஆர்டர் அல்லது டி.டி., மூலமாக ஈஐஎக என்ற பெயரில் விண்ணப்பிக்கும் மையத்தில் மாற்றத்தக்கதாக எடுத்து அனுப்ப வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் எதுவும் கிடையாது. முறையான படிவ மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, பாஸ்போர்ட் புகைப்படம், சான்றிதழ் நகல்கள் மற்றும் உரிய ஆவணங்களை இணைத்து 13.02.2013க்குள் கிடைக்குமாறு உரிய மையத்திற்கு அனுப்ப வேண்டும்.
சென்ட்ரல் ரிசர்வ் போலீஸ் படையின் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.01.2013 அடிப்படையில் 21 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். 10ம் வகுப்புக்கு இணையான படிப்பை முடித்துவிட்டு, 3 ஆண்டு படிக்கக்கூடிய டிப்ளமோ படிப்பை சிவில் இன்ஜினியரிங் பிரிவில் முடித்திருக்க வேண்டும். இந்தியாவின் எந்த பகுதியிலும் பணிபுரியத் தயாராக இருக்க வேண்டும். இந்தத் தகுதிகளுடன் சில குறைந்த பட்ச உடல் தகுதிகளும் தேவைப்படுகிறது. உயரம் குறைந்த பட்சம் 170 செ.மீ., இருக்க வேண்டும். மார்பளவு குறைந்த பட்சம் 80 செ.மீ.,ரும், 5 செ.மீ., விரியும் தன்மையும் பெற்றிருக்க வேண்டும். கண்ணாடி அணிந்தவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியாது. அதே போல் வண்ணக் குறைபாடு உள்ளவர்களும் விண்ணப்பிக்க முடியாது. இந்தப் பதவிக்கு எழுத்துத் தேர்வு மற்றும் இதர தொடர் தேர்ச்சி முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
சி.ஆர்.பி.எப்.,பின் மேற்கண்ட பதவிக்கு ரூ.50/- ஐ போஸ்டல் ஆர்டர் அல்லது டி.டி., மூலமாக ஈஐஎக என்ற பெயரில் விண்ணப்பிக்கும் மையத்தில் மாற்றத்தக்கதாக எடுத்து அனுப்ப வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் எதுவும் கிடையாது. முறையான படிவ மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, பாஸ்போர்ட் புகைப்படம், சான்றிதழ் நகல்கள் மற்றும் உரிய ஆவணங்களை இணைத்து 13.02.2013க்குள் கிடைக்குமாறு உரிய மையத்திற்கு அனுப்ப வேண்டும்.
தமிழ் நாடு, புதுச்சேரி, ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்து விண்ணப்பிப்பவர்கள் பின்வரும் மையத்திற்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
முகவரி:
Dy. Inspector General of Police,
Group Centre, CRPF, Chandrayan Gutta,
P.O., Keshogiri, Hyderabad,
Andhra Pradesh - 500 005
விண்ணப்பிக்க கடைசி நாள் - 13.02.2013
மேலும் விபரங்களுக்கு கீழ்க்கண்ட இங்கே செல்லுங்கள்..
Post a Comment